
பிரபல நடிகரும், டப்பிங் ஆர்டிஸ்டும்மான சாய் குமாரின் மகனான ஆதி, டோலிவுட்டில் பிரேம காவாலி என்ற படத்தில் அறிமுகமாகி நட்சத்திர அந்தஸ்தை பெற்றவர். அவருக்கு அடுத்தடுத்து படங்கள் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை.
அவருடைய தந்தையான சாய் குமார் கன்னட சினிமாவிலும் ஒரு கலக்கு கலக்கியவர். அதனை தொடர்ந்து ஆதியும் கன்னட சினிமாவில் நுழைந்தார். ஆனால் அங்கும் அவரால் இதுவரையில் பெரிய ஹிட் கொடுக்கவில்லை.
இந்நிலையில், அவர் தனது சம்பளம் ரூ 50 லட்சமாக உயர்த்தி இருப்பதாக தெரிகிறது. சமீப காலமாக அவர் ஹிட் படம் எதுவும் கொடுக்காத நிலையில், அவர் தனது சம்பளத்தை உயர்த்தி இருப்பது பலரையும் புருவத்தை உயர்த்த வைத்துள்ளது.
ஹீரோவாக பெரிய அளவில் ஹிட் கொடுக்காத நிலையில், ஆதி கேரக்டர் ரோலில் புதுமையாக நடிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் விரும்புகிறார்கள்.
Post your comment
Upcoming Birthdays of Stars
Go to More Profiles
Upcoming Tamil Movies
Go to More Movies
Latest Gallery
Go to More Galleries