தேசிய விருது பெற்ற இயக்குனர் பாலா முதன் முறையாக பல முறை தேசிய விருது வென்ற பாடல் ஆசிரியர் வைரமுத்துடன் கை சேர உள்ளார்.
பாலா என்ற இளைஞர், வாய்ப்பு மறுக்கப்பட்டு அல்லது தொடங்கிய படம் பாதியில் நின்று தவித்த காலத்தில் அவரை உறுதுணையாக இருந்து, படைப்பாளியாக நிமிர வைத்தவர்கள் இருவர். ஒருவர் சிவகுமார். இன்னொருவர் இசைஞானி இளையராஜா.
இளையராஜாவுடன் பணியாற்றியவர்கள், அவரை விட்டுப் பிரிந்ததும் செய்யும் முதல் வேலை, வைரமுத்துவை அழைத்து வாய்ப்பு தருவதுதான்.
இந்த லிஸ்டில் இப்போது இணைந்திருப்பவர் பாலா.
பாலா தற்போது இயக்கி வரும், 'பரதேசி' படத்திற்கு பாடல் ஒன்றை எழுதியுள்ளார் வைரமுத்து. இந்நிலையில் படத்தின் டிரையலர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா செப்டம்பர் மாதம் லண்டனில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
Post your comment


