
தமிழில் தோனி, வெற்றிச்செல்வன் படங்களில் நடித்த ராதிகா ஆப்தேவின் நிர்வாண வீடியோ படம் இணைய தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
ஒரு இளைஞனுக்கு ராதிகா ஆப்தே தன் அந்தரங்கங்களை காட்டுவதாக அந்த வீடியோ காட்சி உள்ளது. இந்த காட்சி இந்திபட இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கும் ஒரு குறும்படத்தில் இடம்பெறுகிறது.
அந்தப் படம் சர்வதேச மார்கெட்டிங்கிற்காக உருவாக்கப்படும் 20 நிமிட படம் என்று கூறப்படுகிறது. இந்த காட்சி வெளியானதைப் பார்த்து இயக்குனர் அனுராக் காஷ்யப்பும், ராதிகா ஆப்தேவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இது குறித்து அனுராக் காஷ்யப் மும்பை போலீசின் சைபர் க்ரைம் இணை கமிஷனர் பிரசன்னாவை சந்தித்து புகார் கொடுத்தார். தன் யூனிட்டில் உள்ள யாரோதான் இதை செய்திருப்பதாக அவர் சந்தேகம் அடைந்துள்ளார்.
இதனால் அனுராக் காஷ்யப்பின் உதவியாளர்கள், படப்பிடிப்பில் இருந்தவர்கள் அனைவரும் போலீசாரின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறார்கள். போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
இதற்கிடையில் நிர்வாண காட்சியை படம் எடுத்த இயக்குனர் அனுராக் காஷ்யப், நடித்த ராதிகா ஆப்தே ஆகியோர் மீது பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டன கணைகள் குவிந்து கொண்டிருக்கிறது.
Post your comment