
‘காதல் மன்னன்’, ‘அமர்க்களம்’, ‘ஜெமினி’, ‘அட்டகாசம்’, ‘வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்.,’ உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய சரண், தற்போது வினய்யை வைத்து ‘ஆயிரத்தில் இருவர்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீடு சமீபத்தில் முடிவடைந்துள்ளது. மேலும், விரைவில் படத்தை வெளியிட முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், சரண்-வினய் இருவரும் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையவிருக்கிறார்கள். இப்படத்திற்கு ‘ஆள் அம்பு சேனை’ என்று பெயரிட்டுள்ளனர். இப்படத்தை சரண் தனது சொந்த நிறுவனமான சரண் மூவி பேக்டரி மூலம் தயாரிக்கிறார்.
இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர்கள், நடிகைகள் விவரம் எதுவும் இதுவரை தெரிவிக்கவில்லை. இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பை இன்று தொடங்கியுள்ளனர். ஆகஸ்ட் 2015-ல் படத்தை வெளியிடப்போவதாகவும் அறிவித்துள்ளனர்.
Post your comment
Upcoming Birthdays of Stars
Go to More Profiles
Upcoming Tamil Movies
Go to More Movies
Latest Gallery
Go to More Galleries