ஆண்டு தோறும் இந்தியாவில் வெளியாகும் சிறந்த படங்களில் சிலவற்றை வெளிநாட்டு படபிரிவின் கீழ் ஆஸ்கார் விருதுக்கு அனுப்பப்படுவது வழக்கம்.
இந்த வரிசையில் ஆஸ்கார் விருதுக்காக இந்த ஆண்டு போட்டியிடும் இந்திய படங்களின் பட்டியளில், முருகதாஸின் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவந்த 'எழாம் அறிவு'ம், பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் புதுமுகங்கள் நடித்து வெளிவந்த 'வழக்கு எண்18/9'ம் இடம் பெற்றுள்ளன.
உலக திரைப்படங்களுக்கு வழங்கும் மிக உயர்ந்த விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருது எல்லா சினிமா கலைஞர்களின் கனவு இலக்காகவே இருந்து வருகிறது.
எனவே இந்திய படங்களில் சிறந்த 10 படங்களை இந்திய சம்மேளனம் ஆஸ்காருக்காக தெரிந்துள்ளது. அந்த வகையில் தமிழ் படமான 'எழாம் அறிவு', 'வழக்கு எண்18/9' மற்றும் இந்தியிலிருந்து 'கஹானி', 'கேங்ஸ்' 'ஆப் வஸிப்பூர்', 'பாங் சிங் டோமர்', 'தி டர்ட்டி பிக்சர்' மற்றும் 'பார்பி' ஆகிய படங்களும் தேர்வாகியுள்ளன.
இதில் தி டர்ட்டி பிக்சர் படத்தில் நடித்த வித்யா பாலனுக்கு சிறந்த நடிப்புக்காக தேசிய விருது கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Post your comment


