நடிகை ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் பாடகராக பல ஹிட் பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்தவர், அதன்பின் பச்சைக்கிளி முத்துசரம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்,
அதனை தொடர்ந்து பல வித்தியசமான திரைப்படங்களை தேர்ந்தெடுத்து, அதில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார்.
மேலும், தற்போது இவர் மாஸ்டர், அரண்மனை 3 உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபத்திரங்களில் நடித்து வருகிறார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது, இதனால் நடிகை ஆண்ட்ரியா இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.
நேற்று இன்ஸ்டாகிராம் லைவ் சேட்டில் தோன்றி அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார், மேலும், ரசிகர்களின் வேண்டுகோளின் படி அவர்கள் கேட்ட பாடல்களையெல்லாம் பாடி அசதியுள்ளார்.