Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஊரடங்குக்கு பின் மக்கள் தியேட்டருக்கு வர பயப்படுவார்கள் – பிரபல இயக்குனர் சொல்கிறார்

theaters

கொரோனா மற்றும் ஊரடங்கு பிரச்சினை திரையுலகில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தியேட்டர்கள் மூடப்பட்டன. தியேட்டர் அதிபர்கள் வருமானத்தை இழந்துள்ளனர். தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து இருக்கிறார்கள். ஒட்டுமொத்த சினிமா உலகமே பாதிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், ஊரடங்கு நிலை வாபசானால், இந்த பாதிப்பு நீங்குமா? என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.

இதுபற்றி பட அதிபர், இயக்குனர், வினியோகஸ்தர், தியேட்டர் அதிபர், தயாரிப்பாளர்கள் சங்க முன்னாள் தலைவர் கேயார் கூறியதாவது: “ஊரடங்கு சட்டம் வாபஸ் ஆன பின் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும், பெரிய அளவில் வசூல் ஆகாது. தியேட்டர்களுக்கு பொதுமக்கள் வர பயப்படுவார்கள். அவர்களுக்கு முழுமையாக பயம் நீங்குவதற்கு ஒரு வருடம் ஆகும் என்கிறார்கள். தியேட்டர்களில் வசூல் குறைந்தால், அது தயாரிப்பாளர்களையும் பாதிக்கும்.

உதாரணத்துக்கு, ரூ.75 கோடி வசூல் செய்யும் ஒரு பெரிய கதாநாயகனின் படம், ரூ.45 கோடிதான் வசூல் செய்யும். தியேட்டர்களுக்குப் போய் படம் பார்க்கும் கூட்டம் குறைந்து கொண்டே வருகிறது. இணையதளங்களில் படம் பார்ப்பவர்கள் அதிகமாகிக் கொண்டே வருகிறார்கள். சினிமா, இன்னொரு பெரிய சவாலை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது”.

இவ்வாறு கேயார் கூறினார்.