தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக திகழ்பவர் இயக்குனர் கெளதம் மேனன், மின்னலே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
அதன்பின் பல முன்னணி நடிகர்களுடன் இணைத்து பல வெற்றி திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
இந்நிலையில் கொரோனா காரணமாக தற்போது இந்திய அளவில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது, மேலும் இது குறித்து இயக்குனர் கெளதம் மேனன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் “ஊரடங்கு சட்டத்தை மீறி யாரும் வெளியே சுற்றி கொண்டு இருக்காதீர்கள், இது மிகவும் தவறான செயல்.
அப்படி உங்களுக்கு வெறுப்பாக இருந்தால் படம் பாருங்கள், புக்ஸ் படியுங்கள். மேலும் நான் இயக்கிய அச்சம் என்பது மடமையடா மற்றும் என்னை அறிந்தால் திரைப்படங்களை பார்க்காதீர்கள்.
ஏன்னென்றால் அதில் வரும் கட்சிகளை போல் உங்களுக்கும் வெளியே செல்ல தோணும், அதற்கு பதில் வாரணம் ஆயிரம் சூர்யாவை போல வீட்டிலேயே இருந்து உடலை எப்படி பிட்டாக வைத்து கொள்வது என கற்றுக்கொள்ளுங்கள்” என கூறியுள்ளார்.