சமூக வலைத்தளத்தில் ரசிகர்களுடன் உரையாடல் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார் பிந்து மாதவி. அப்போது, காதலில் விழுந்த அனுபவம் பற்றி சொல்லுங்கள் என ரசிகர் ஒருவர் கேட்டார். அதை காதல் என சொல்வதா தெரியவில்லை.
ஒருவர் மீது சீக்ரெட் கிரஷ் உள்ளது. அதை யாரிடமும் சொன்னது கிடையாது. உடனே இதற்கு காதல் சாயம் பூசி, நானும் காதலிக்கிறேன் என சொல்லிவிட முடியாது. இது ஒரு ஈர்ப்புதான். அதனால் இதை காதல் என சொல்லிவிட முடியாது. அதேபோல், நான் எந்த கமிட்மென்ட்டுக்கும் ஆளாகவில்லை. எனவே இப்போதைக்கு சிங்கிளாகவே இருக்கிறேன் என்றார் பிந்து மாதவி.