சின்னத்திரையில் பிசியாக இருக்கும் நடிகை ஜெனிபர் கூறியதாவது : வீட்டுக்குள் வேலை செய்வது பழக்கப்பட்டதுதான். ஆனால் குடும்பத்தோடு வீட்டை விட்டு வெளியே போகாமல் இருப்பதுதான் புதிய அனுபவம். ஆனாலும் மருந்தே இல்லாத ஒரு நோயில் இருந்து நமக்கு பாதுகாப்பு அவசியம் என்பதால் வீட்டுக்குள்ளேயே இருப்பது கஷ்டமாக தெரியவில்லை.
ஆனால் வெளியே சென்று வரும் போது கை, காலை கழுவிவிட்டு வீட்டுக்குள்ளே வருவது, வெளியில் இருந்து கொண்டு வரும் பொருட்கள் எதுவாக இருந்தாலும் சுத்தம் செய்து வீட்டுக்குள் எடுப்பது, போன்ற பழக்கங்களை ஏற்கனவே என் கணவரிடம் இருந்து நான் கற்றது தான். தினமும் நாங்கள் கடைப்பிடிப்பதுதான்.
எனவே இந்த விழிப்புணர்வு புதிதாக தெரியவில்லை. ஆனால் பல குடும்பங்களில் புரிதல் இல்லாமல் இருக்கும். இப்போது எல்லோரும் ஒன்றாக குடும்பத்துடன் பொழுதை கழிக்கும் போது கொரோனாவால் குடும்பத்துக்குள் அனைவருடனும் நிச்சயம் புாதலும் ஏற்பட்டிருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.