பாகுபலி படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் ராஜமவுலி, ஆர் ஆர் ஆர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடித்து வருகிறார்கள். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கன், ஆலியா பட் நடித்து வருகிறார்கள்.
சமீபத்தில் இதன் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தை அடுத்து தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ்பாபுவை வைத்து ராஜமவுலி படம் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதை மகேஷ்பாபு உறுதி செய்திருப்பதாக கூறப்படுகிறது.
