தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும் வசூல் மன்னிக்கவும் திகழ்பவர். இவருக்கு பெரிய அளவில் ரசிகர்கள் வட்டம் உள்ளதால் இவரின் திரைப்படங்கள் பிரம்மாண்டமாக வெளியாகும்.
சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் நல்ல வசூல் சாதனை புரிந்தது. அதனை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்தார்.
இப்படம் வெளியாகவிருந்த நிலையில் கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. மேலும் இவரின் அடுத்த திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு இப்போதே பெரிய அளவில் உள்ளது.
இந்நிலையில் நடிகர் மற்றும் இயக்குனரான சசிகுமார் தளபதி விஜய்யுடன் படம் பண்ணுவது குறித்து ஒரு பெட்டியில் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது “விஜய் சாரிடம் ஏற்கனவே ஒரு வரலாற்று கதை சொல்லிருந்தேன், அவருக்கும் பிடித்திருந்தது.
ஆனால் அது ஒரு பெரிய பட்ஜெட் படம் என்பதால் அந்த சமயத்தில் அந்த திரைப்படம் பண்ண முடியாமல் போனது. கண்டிப்பாக விஜய் சார் வைத்து ஒரு படம் பண்ணுவேன்” என கூறியுள்ளார்.