ஆடுகளம் படத்தில் இருந்து தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக மாறிவிட்டார் திரு வெற்றிமாறன்.
இவர் தற்போது காமெடி நடிகர் சூரி அவர்களை மட்டும் மையப்படுத்தி ஒரு படம் உருவாக்கவுள்ளார்.
மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி 25ஆம் தேதியில் இருந்து தொடங்கவுள்ளதாக சில தகவல்கள் கசிந்துள்ளது.
இப்படத்திற்கு பிறகு தான் சூர்யாவுடன் வெற்றிமாறன் இணையவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.