நேற்று முன்தினம் இரவு இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தபோது கிரேன் சரிந்து விழுந்ததில் படக்குழுவில் பணியாற்றிய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்து தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் பற்றி சென்னை நஸ்ரத்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். லைகா நிறுவனம் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் கிரேன் உரிமையாளர், புரொடக்ஷன் மேனேஜர் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.