Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிப்பது ஏன்? – சமந்தா விளக்கம்

samantha speech

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜானு படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து இவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார். மற்றொரு நாயகியாக நயன்தாரா நடிக்க உள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன் என்பது குறித்து நடிகை சமந்தா சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: இயக்குனர் விக்னேஷ் சிவன் என்னிடம் கதை சொல்லிய விதம் மிகவும் பிடித்திருந்தது.

அதேபோல் இந்த கதாபாத்திரமும் என்னை கவர்ந்தது. விஜய் சேதுபதி, நயன்தாரா போன்ற முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்தால் தன்னுடைய திறமையை வெளிப்படுத்த முடியும் என்பதற்காக இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாக சமந்தா தெரிவித்துள்ளார்.