கொரோனா வைரஸ் உலகளவில் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. நோய் தொற்று தீவிரமடைந்து லட்சக்கணக்கான மக்களை பாதித்து வருகிறது. ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளும் நேர்ந்துள்ளன.
இந்நிலையில் மக்கள் அனைவரும் கட்டாயம் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டியது அவசியமாகியுள்ளது.
சீமராஜா படத்தில் சிவகார்த்திகேயன் பேசும் வசனம் சமூக இடைவெளியை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது.
அண்மையில் சிவகார்த்திகேயன் கூட வீடியோவில் மக்களையும் ரசிகர்களையும் பாதுகாப்பாக இருக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் சீமராஜா படத்தின் அந்த வசனத்தை திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் பகிந்துள்ளார். இது பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Thank you brother @Siva_Kartikeyan “நீ யாரா வேணும்னா இரு
எவனா வேணும்னா இரு ; ஆனா
என்கிட்ட இருந்து கொஞ்சம் தள்ளியே இரு “ #SocialDistancing 😂 https://t.co/LUrC7149nn— Vijayakarthikeyan K (@Vijaykarthikeyn) April 2, 2020