Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கொரோனா பயத்தில் நாய், பூனைகளை விரட்டுபவர்கள் முட்டாள்கள் – ரஜினி பட நடிகை சாடல்

Sonakshi Sinha

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி, தினமும் ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்து வருகிறது. இந்த சூழலில் அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள வன விலங்கு பூங்காவில் பெண் புலி ஒன்றுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் 2 புலிகளுக்கும், 3 சிங்கங்களுக்கும் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தெரிவதாகவும் வன விலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் நாய், பூனை உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகள் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது. இதனால் பயந்துபோன பலர் தங்கள் வீடுகளில் வளர்த்த நாய், பூனைகளை சாலைகளில் விரட்டி விடுவதாக சமூக வலைத்தளத்தில் பலர் புகைப்படங்களோடு வெளியிட்டனர். இதனை ரஜினிகாந்துடன் ‘லிங்கா’ படத்தில் நடித்துள்ள பிரபல இந்தி நடிகை சோனாக்சி சின்ஹா கண்டித்துள்ளார்.

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “செல்லப்பிராணிகளால் கொரோனா பரவுகிறது என்ற தகவலை நம்பி தங்கள் நாய், பூனைகளை வெளியேற்றுபவர்கள் முட்டாள்கள். உங்கள் அறியாமையையும், மனிதநேயமற்ற இதுபோன்ற செயல்களையும் கைவிடுங்கள். கொரோனாவை நாய்கள் பரப்புவது இல்லை. விலங்குகளிடம் அன்பு காட்டுங்கள்” என்று கூறியுள்ளார்.