தனுஷ் தமிழ் சினிமாவில் தொடர்ந்து தரமான படங்களாக தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவர் நடிப்பில் வெளிவந்த அசுரன் படம் பல விருதுகளை தட்டிச்சென்றது.
இந்நிலையில் தனுஷ் தற்போது மாரிசெல்வராஜ் இயக்கத்தில் நடித்து வருகின்றார். இப்படத்திற்கு கர்ணன் என்று டைட்டில் வைத்துள்ளனர்.
இப்படம் குறித்து சமீபத்தில் பெரும் சர்ச்சை எழுந்து வருகின்றது, கருணாஸ் இப்படத்தை தடை செய்ய வேண்டும், இயக்குனரை கைது செய்ய வேண்டும் என்று கூறி வந்தார்.
இதை தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் இந்த விஷயம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது, கர்ணன் படக்குழுவும் இதற்கு எந்த ஒரு பதிலும் சொல்லாமல் இருந்தது.
ஆனால், நேற்று கர்ணன் படக்குழு சார்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் தன் டுவிட்டர் பக்கத்தில் கிரிக்கெட் விளையாடும் புகைப்படத்தை பதிவிட்டு ‘ரிலாக்ஸ் டைம்’ என்று டுவிட் செய்துள்ளார்.
இதன் மூலம் படக்குழு சர்ச்சைகளுக்கு மறைமுக பதிலடி கொடுத்துள்ளது என சமூக வலைத்தளத்தில் பேசி வருகின்றனர்.
#karnan ரிலாக்ஸ் time🖤 pic.twitter.com/XlqSd55dkc
— Mari Selvaraj (@mari_selvaraj) February 19, 2020