கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான படம் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’. இதில் சிம்பு கதாநாயகனாகவும், திரிஷா கதாநாயகியாகவும் நடித்திருந்தார்கள். மேலும் சமந்தா இப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இப்படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்றது.
இப்படம் வெளியாகி 10 வருடங்கள் கடந்து விட்டது. சமந்தா தமிழ் திரையுலகிற்கு வந்து 10 ஆண்டுகள் கடந்ததையும், விண்ணைத்தாண்டி வருவாயா 10 ஆண்டுகள் ஆனதையும், ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடினார்கள்.
இந்நிலையில், இயக்குனர் கவுதம் மேனனிடம் சமூக வலைத்தளத்தில் ரசிகர் ஒருவர் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் 2ம் பாகம் வருமா என்று கேட்டார். இதற்கு கவுதம் மேனன், சிம்பு தலையாட்டினால் விண்ணைத்தாண்டி வருவாயா 2ம் பாகம் உருவாகும் என்று கூறியிருக்கிறார்.