80களில் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக பல படங்களில் நடித்தவர் நடிகை சோபனா. மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் ஷோபனாவின் அதிகாரபூர்வ முகநூல் கணக்கை மர்ம நபர்கள் சில ஹேக் செய்துவிட்டனர். சமீப நாட்களாக அதில் வெளிநாட்டினர் சிலரது வீடியோக்கள் தனது பக்கத்தில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அது போல ஐந்து வீடியோக்கள் மர்ம நபர்களால் இவரது அதிகாரபூர்வ பக்கத்தில் போடப்பட்டுள்ளது. இது பற்றி போலீசில் புகார் அளித்துள்ளார் சோபனா.
ஹேக் செய்த சம்பவம் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.