பிக்பாஸ் 3 புகழ் தர்ஷன் பற்றி நடிகை சனம் ஷெட்டி நேற்று அளித்த போலீஸ் புகார் பற்றித்தான் சினிமா துறையில் பலரும் பேசிக்கொண்டிருக்கின்றனர்.
தர்ஷன் பற்றி சனம் ஷெட்டி மீடியாவில் தொடர்ந்து பேட்டி கொடுத்து வருகிறார். அவர் பேசும்போது “தர்ஷனுக்கு பிக்பாஸ் வாய்ப்பு பெற்றுக்கொடுத்ததே நான் தான். அவர் என்னை நன்றாக பயன்படுத்திக்கொண்டு தற்போது தூக்கி எறிந்துவிட்டார் என்பது போல தான் தோன்றுகிறது. அவருக்கு பல உதவிகள் செய்துள்ளேன். நிச்சயதார்த்தத்திற்கு கூட நான் தான் 5 லட்சம் செலவு செய்தேன். அவருக்கு கோல்டு மற்றும் ஐபோன் வாங்கி கொடுத்தேன்.”
“அவரை மகன் போல என் குடும்பத்தினர் பார்த்து கொண்டனர். ஆனால் அவர் திருமணத்தை நிறுத்தியதை கூட நேரில் வந்து சொல்லவில்லை” என சனம் ஷெட்டி கூறியுள்ளார்.