தமிழில் வெளிவந்த தாலாட்டு கேக்குதாமா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் திரு ராஜ் கபூர் அவர்கள்.
இவர் விஜய், அஜித், சூர்யா போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து துணை நடிகராகவும் நடித்திருப்பார்.
இதன்பின் சுந்தர்.சி எடுத்த பல படங்களில் இவர் நடித்து கொண்டே இருந்தார். ஏன் அவர் தயாரித்த நந்தினி சீரியலை கூட இவர் தான் இயக்கி வந்தார், தற்போது ரன் தொடரையும் இவர் தான் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு ஷாரூக் கபூர், ஷமீனா கபூர், ஷானியா கபூர் என் மூன்று பிள்ளைகள் உள்ளனர். மேலும் இவரின் மகன் ஷாரூக் கபூர் இன்று காலை உடல் நலம் சரி இல்லாத காரணத்தினால் உயிர் இளந்துள்ளதாக தெரிவந்துள்ளது. ஆம் தனது அம்மாவுடன் மெக்காவில் இருந்த போது மூச்சி திணறல் ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார் ஷாரூக் கபூர் என் தெரியவந்துள்ளது.
மேலும் இந்த சம்பவம் இயக்குனர் ராஜ் கபூர் அவர்களின் குடும்பத்தினரையும் தமிழ் திரையுலகையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.