Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

புதிய முயற்சி எடுக்கும் யோகிபாபு…. ஓகே சொல்வாரா நயன்தாரா?

yogi babu and nayanthara

தமிழ் திரையுலகில் முன்னணி காமெடியனாக இருப்பவர் யோகிபாபு. இவர் கைவசம் டஜன் கணக்கில் படம் வைத்துள்ளார். இதுவரை காமெடியனாகவும், ஹீரோவாகவும் நடித்து வந்த யோகிபாபு, தற்போது புது அவதாரம் எடுக்க உள்ளார். டகால்டி படத்தை தயாரித்த எஸ்.பி.சவுத்ரி அடுத்ததாக தயாரிக்கும் புதிய படத்திற்காக யோகிபாபு கதை, திரைக்கதை, வசனம் எழுத உள்ளாராம்.

மேலும் இந்த படத்தில் நயன்தாராவை நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறார்களாம். ஒருவேளை நயன்தாரா சம்மதிக்காவிட்டால், காஜல் அகர்வாலை அணுக திட்டமிட்டுள்ளார்களாம். ஏற்கனவே யோகிபாபு, கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவுடனும், கோமாளி படத்தில் காஜல் அகர்வாலுடனும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.