தமிழில் வெளிவந்த துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் செல்வராகவன்.
தனது இயக்கத்தின் மூலமாக பல நல்ல படங்களை திரையுலகிற்கும் தனது ரசிகர்களுக்கும் விருந்தாக தந்துள்ளார். அதிலும் குறிப்பாக இவர் எடுத்த புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற படங்களை உதாரணமாக கூறலாம்.
இவர் அடுத்து என்ன படம் பண்ண போகிறார் என்று பலருக்கும் ஒரு எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கிறது.
இதனை குறித்து தனது சமூக வலைதள பக்கமான டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை ஏற்கனவே வெளியிட்டிருந்தார். அந்த வகையில் தற்போது மீண்டும் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். இதில் தனது அடுத்த படத்தின் ஸ்கிரிப்டிற்கு பைனல் டச் கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இதில் பார்க்கும் பொழுது செந்தில், ரகு என இரு கதாபாத்திரங்களின் பெயர்கள் தெரிகிறது. மேலும் இதை பார்த்த ரசிகர்கள் இது ஆயிரத்தில் ஒருவன் 2 அல்லது புதுப்பேட்டை 2 படமாக தான் இருக்கும் என்று கமெண்டில் பேசி வருகிறன்றனர்.
Giving final touches to my script 🤓🤓🤓😀 pic.twitter.com/gQs1THCRsa
— selvaraghavan (@selvaraghavan) February 27, 2020