Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பையனூரில் திரைப்படத்துறையினருக்கு 6 ஆயிரம் வீடுகள் – ஆர்.கே.செல்வமணி பேட்டி

rk selvamani

திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி, சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசு சென்னை பையனூரில் திரைப்பட தொழிலாளர்களுக்கு 15 ஏக்கர் நிலத்தில் ஸ்டுடியோ மற்றும் படப்பிடிப்பு தளங்கள் கட்டவும் 50 ஏக்கர் நிலத்தில் 6 ஆயிரம் குடியிருப்புகள் கட்டவும் இடம் வழங்கி உள்ளது. அதில் ஏற்கனவே எம்.ஜி.ஆர் நூற்றாண்டு படப்பிடிப்பு தளம் கட்டி முடிக்கப்பட்டது. தற்போது அம்மா படப்பிடிப்பு தளம் கட்டப்பட்டு வருகிறது.

அடுத்து 6 ஆயிரம் குடியிருப்புகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக ஆயிரம் குடியிருப்புகள் கட்டப்படும். 500, 800, 1,500, 2 ஆயிரம் சதுர அடி என்று 4 வகை குடியிருப்பு பகுதிகளாக இவை கட்டப்படும். இதில் குடியிருப்புகள் வேண்டி இயக்குனர்கள், நடிகர்கள், ஒளிப்பதிவாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என 3 ஆயிரத்து 750 பேர் விண்ணப்பித்துள்ளனர். அடுத்த 2 ஆண்டுகளில் ஒட்டுமொத்த சினிமாவும் பையனூருக்கு மாறி விடும்.

இவ்வாறு ஆர்.கே.செல்வமணி கூறினார்.