‘பிகில்’ படத்துக்காக பெற்ற சம்பளம் குறித்தும், சொத்து மதிப்பு குறித்தும் நடிகர் விஜய் வீட்டில் சமீபத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்தும், சொத்து முதலீடு குறித்தும் நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதாவிடம் வருமான வரி அதிகாரிகள் 24 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில் விஜய் தற்போது நடித்து வரும் ‘மாஸ்டர்’ படத்தின் இணை தயாரிப்பாளர் லலித்குமாரிடமும் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள லலித்குமாரின் இல்லத்தில் இந்த விசாரணை நடந்தது. இதுகுறித்து வருமான வரித்துறை புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ‘கடந்த மாதம் நடிகர் விஜய் வீட்டில் நடந்த சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்தோம்.
அதில் நடிகர் விஜய் வங்கிக்கணக்கில் லலித்குமார் என்பவரிடம் இருந்து குறிப்பிட்ட தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. அந்த தொகை ‘மாஸ்டர்’ படத்துக்காக பெறப்பட்ட முன்பணம் என விஜய் தரப்பில் கூறப்பட்டு ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. எனவே அதுகுறித்து லலித்குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டது’, என்றனர்.
அரிசி கஞ்சி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். பெரும்பாலானோர் சாதம் வடித்து மீதி தண்ணியை கீழே ஊற்றி விடுவார்கள்.…
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று சீதா ராமன். இந்த சீரியலில் மகாலட்சுமி…
எங்க பாத்தாலும் ஆஃபர் ஆஃபர் தான் என அசந்து போய் உள்ளார் மகாநதி சீரியல் காவேரி. தமிழ் சின்னத்திரையில் விஜய்டிவி…
தமிழ் சினிமாவில் மெட்ராஸ் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் கேத்தரின் தெரசா. இதைத்தொடர்ந்து இவர் கதகளி, கதாநாயகன், அருவம், கணிதன்,…