தமிழ் திரையுலகில் மிக பெரிய அத்தியாயத்தை வசூலில் உருவாக்கியது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்.
ஆம் எந்திரன், சிவாஜி, லிங்கா, கபாலி உள்ளிட்ட பல 100 கோடி படங்களை தமிழ் திரையுலகிற்கு தேடி தந்தவர் ரஜினி.
இதன்பின் ரஜினியை அடுத்து விஜய் தான் துப்பாக்கி படம் மூலம் 100 கோடி படம் தந்தார் என நமக்கு தெரியும்.
ஆனால் 2011ஆம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்து வெளிவந்த 7ஆம் அறிவு திரைப்படம் அப்போதே வசூலில் ரூ 100 கோடி அடித்து சாதனை புரிந்தது. இது பலரும் தெரியாத ஒரு விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு பிறகு ரூ 100 கோடி கொடுத்த நடிகர் சூர்யா தான்.