வருமான வரித்துறையினரின் சோதனை முடிந்து விஜய் நேற்று மாஸ்டர் படப்பிடிப்பில் மீண்டும் இணைந்தார். படப்பிடிப்புகள் தற்போது நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் நடைபெற்று வருகிறது.
அதே வேளையில் சுரங்கத்தில் பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும், படப்பிடிப்புகளை அனுமதிக்கூடாது என போராட்டம் நடத்தப்பட்டது.
இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் கலந்து கொண்ட அர்ஜூன் சம்பத் நடிகர் விஜய் மோசடி செய்து பணம் சேமித்துள்ளார்; வரி செலுத்தாமல் இருந்த ரஜினியையும், விஜய் மீதான வரி எய்ப்பு குற்றச்சாட்டையும் ஒப்பிடுவது ரஜினிகாந்தை அவமதிக்கும் செயல் என கூறியுள்ளார்.
இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்ட ஆதரவு பிரச்சாரத்தை தான் பாஜகவினர் செய்ததாகவும், படப்பிடிப்பிற்கு எதிராக என தவறாக பரப்புரை செய்யப்பட்டுள்ளதாகவும் பாஜக பிரமுகர் ஒருவர் கூறியுள்ளார்.