தென்னிந்திய சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் மணிரத்தினம். இவரது இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி என பல முக்கிய பிரபலங்கள் இணைந்து நடித்து கடந்த செப்டம்பர் மாதம் வெளியான பிரம்மாண்ட திரைப்படம் பொன்னியின் செல்வன்.
உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட இந்த திரைப்படம் தொடர்ந்து வசூல் சாதனை செய்து தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்துள்ளது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால், பொன்னியன் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை வரும் ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பையும் அண்மையில் வெளியிட்டிருந்த படக்குழு தற்போது இப்படம் வெளியாக இடையில் 3 மாதங்களே உள்ள நிலையில் இன்னும் 100 நாட்களில் படம் திரைக்கு வருகிறது என்று அறிவிப்பை ஸ்பெஷல் ப்ரோமோ வீடியோவுடன் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா நிறுவனம் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதனால் இப்படம் மீது உள்ள எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கிடையே அதிகரித்து வருகிறது.
The throne. The vengeance. The love. The war. Witness it all, in 100 days!
Mark your calendars – #PS2 releasing worldwide on April 28th ⚔#PonniyinSelvan #CholasAreBack #ManiRatnam @arrahman @madrastalkies_ @LycaProductions @Tipsofficial @tipsmusicsouth @IMAX @primevideoIN pic.twitter.com/7ywePAcpyn
— Lyca Productions (@LycaProductions) January 18, 2023