தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் நேற்று வெளிவந்த திரைப்படம் தான் எதற்கும் துணிந்தவன்.
குடும்ப கதையாக, பெண்களுக்கு எதிராக நடக்கும் அட்டூழியங்களை தட்டி கேட்கும் படமான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
முதல் நாளான நேற்று மட்டும் இந்த படம் தமிழகத்தில் மட்டும் ரூபாய் 15.21 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸை மிரட்டியுள்ளது. தொடர்ந்து இந்த படம் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் வசூல் வேட்டை ஆடி வருகிறது.
