தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் எதற்கும் துணிந்தவன்.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான இந்தப் படத்துக்கு டி இமான் இசையமைத்துள்ளார். இந்த படம் முதல் நாளே தமிழகத்தில் 15 கோடி வசூலைத் தாண்டியது.
இரண்டு நாளில் உலகம் முழுவதும் சேர்த்து 50 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளது. முதல் நாளில் 30.54 கோடி ரூபாய் மற்றும் இரண்டாம் நாளில் 18.10 கோடி என மொத்தம் 48.64 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
