கங்குவா’ படத்தின் பின்னடைவைத் தொடர்ந்து, நடிகர் சூர்யா அடுத்ததாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‘ரெட்ரோ’ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கும் இந்த படம், காதல் மற்றும் கேங்ஸ்டர் போன்ற கதையம்சத்துடன் மே மாதம் 1ம் தேதி திரைக்கு வரவுள்ளது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, விளம்பரப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், சூர்யாவும் அவரது மனைவி ஜோதிகாவும் மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் புகழ்பெற்ற மகாலட்சுமி கோவிலுக்குச் சென்றுள்ளனர். அங்கு ஜோதிகா தனது நெற்றியில் குங்குமப் பொட்டுடன், கழுத்தில் மாலை அணிந்து கோவிலின் கொடி கம்பத்தில் மணி ஒன்றை கட்டும் புகைப்படம் வெளியாகியுள்ளது. மற்றொரு புகைப்படத்தில், அவர் நெய் விளக்கேற்றுகையில் சூர்யா அருகில் நிற்கிறார். மேலும், கோவிலின் பல்வேறு பகுதிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் ஜோதிகா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் ஆன்மீகத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அவ்வப்போது பல்வேறு கோவில்களுக்குச் சென்று வழிபடுவதை அவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். ‘ரெட்ரோ’ படத்தின் வெளியீட்டிற்கு முன்பாக அவர்கள் மகாலட்சுமி கோவிலுக்குச் சென்றிருப்பது படத்திற்கு நல்ல அதிர்ஷ்டத்தையும் வெற்றியையும் தேடித் தரும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர்.
கார்த்திக் சுப்பராஜ் இதற்கு முன்பு வித்தியாசமான கதையம்சங்களை கொண்ட படங்களை இயக்கியுள்ளதால், ‘ரெட்ரோ’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. சூர்யா இதுவரை ஏற்று நடிக்காத ஒரு புதிய கதாபாத்திரத்தில் இப்படத்தில் தோன்றலாம் என்று எதிர்பார்ப்புகள் உள்ளன. பூஜா ஹெக்டேவுடன் சூர்யா இணைந்து நடிப்பது இதுவே முதல் முறை என்பதால், இந்த ஜோடியின் கெமிஸ்ட்ரியை திரையில் காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். ‘கங்குவா’ படத்தின் தோல்வியில் இருந்து மீண்டு வந்து சூர்யா இந்த படத்தின் மூலம் ஒரு வெற்றியைப் பதிவு செய்வாரா என்பதை
பொறுத்திருந்து பார்ப்போம்.
View this post on Instagram