தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இவர் தற்போது சுல்தான் எனும் படத்தில் நடித்து வருகிறார்.
நடிகர் கார்த்தி 2011ஆம் ஆண்டு ரஞ்சனி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் முதல் குழந்தையாக பெண் குழந்தை பிறந்தது. இந்த பெண் குழந்தையின் பெயர் ‘உமையாள்’.
இந்நிலையில் கார்த்தியின் மனைவி ரஞ்சனி இரண்டாம் முறை கர்ப்பமாக இருக்கிறாராம். இதனால் சிவகுமாரின் குடும்பம் மிகவும் ஆனந்தத்தில் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.