Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லாக்டவுனில் விஷால் எடுத்த அதிரடி முடிவு

Action taken by Vishal in Lockdown

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷால். இவர் தனது தாயின் தேவி அறக்கட்டளை மூலம் பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார்.

ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்த நன்றாக படிக்கும் மாணவர்களை தத்தெடுத்து பட்டப்படிப்பு படிக்க வைத்து வருகிறார்கள். கடந்த வருடம் ஊரடங்கில் மாற்றுத்திறனாளிகள், தூய்மைப் பணியாளர்கள், மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் நிவாரண உதவிகளை வழங்கினார்.

மேலும் ஆதரவற்ற சாலையோர மக்களுக்கு உணவுகளை தொடர்ந்து வழங்கி வருகிறார்கள். தற்போது மீண்டும் முழு ஊரடங்கு போடப்பட்டிருப்பதால், தினமும் 500 பேருக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்து இருக்கிறார்.

இந்த உணவு பொருட்களை தேவி அறக்கட்டளைையின் ஒருங்கிணைப்பாளர் ஹரிகிருஷ்ணன் சென்னையில் உள்ள பல இடங்களில் சாலையோரம் இருக்கும் ஆதரவற்ற மக்களுக்கு வழங்கி வருகிறார். அதுபோல், உணவின்றி தவித்து வரும் சாலையோர கால்நடைகளுக்கும் உணவுகளை கொடுத்து வருகிறார்கள்.