தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அசோக் செல்வன். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமான இவர் அதன் பிறகு ஹீரோவாக தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.
இறுதியாக இவரது நடிப்பில் வெளியான போர் தொழில் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படி அந்த நிலையில் கடந்த வாரம் இவருக்கும் பிரபல தயாரிப்பாளர் அருண்பாண்டியன் மகளும் நடிகையுமான கீர்த்தி பாண்டியனுக்கும் திருமணம் என தகவல் பரவியது.
மேலும் திருநெல்வேலியில் செப்டம்பர் மாதத்தில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது அதனை உறுதிப்படுத்தும் விதமாக இவர்களது திருமண அழைப்பிதழ் இணையத்தில் வெளியாகி உள்ளது. செப்டம்பர் 13ஆம் தேதி இவர்களின் திருமணம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களது திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரலாக ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் இவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
