தெலுங்கு திரை உலகில் சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவரது தந்தையும் மூத்த முன்னணி நடிகருமான கிருஷ்ணா மாரடைப்பு ஏற்பட்டு அண்மையில் உயிரிழந்தார். இதனால் மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வந்த மகேஷ் பாபு தற்போது அவரது தந்தையான கிருஷ்ணாவை நினைத்து உருக்கமான ட்விட் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் அவர், “நீங்கள் உங்கள் வாழ்க்கையை பயமின்றி வாழ்ந்தீர்கள். என் உத்வேகம், என் தைரியம் எல்லாம் நீங்கள்தான். இப்போது நானும் உங்களைப் போல் பயமற்றவன். உங்கள் பாரம்பரியத்தை முன்னெடுத்து செல்வேன். நீங்கள் பெருமை அடைவீர்கள். லவ் யூ அப்பா நீங்கள் தான் என் சூப்பர் ஸ்டார்” என்று அப்பதிவில் கூறியிருக்கிறார்.
— Mahesh Babu (@urstrulyMahesh) November 24, 2022