மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இதனால் சென்னையில் உள்ள நேரு ஒரு விளையாட்டு அரங்கத்தில் நேற்றைய தினம் இப்படத்தில் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் திரை பிரபலங்கள் பல சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்ச்சியில் இப்படத்தில் சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் பார்த்திபன் நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா ராய் உடன் இணைந்து செல்பி எடுத்துள்ளார். அதனை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்ட பார்த்திபன் “நந்தினியும் நானும் நடுவில்!” என்று மணிரத்தினம் இருப்பதை குறிப்பிட்டு கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
நந்தினியும் நானும்
நடுவில் அவரும்! pic.twitter.com/drPZdho83p— Radhakrishnan Parthiban (@rparthiepan) March 29, 2023