தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரபாஸ். ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி என்ற படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான மிகப் பெரிய நடிகராக வலம்வந்தார். இந்த படத்தை தொடர்ந்து இவரது நடிப்பில் சாஹோ என்ற திரைப்படம் வெளியானது.
இப்படம் வசூல் ரீதியாக வரவேற்பை பெற்றாலும் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனத்தை பெற்றது. இதனைத் தொடர்ந்து வெளியான ராதே ஷ்யாம் திரைப்படமும் கலவையான விமர்சனங்களை பெற்று வசூலில் கலக்கியது. சாஹோ படத்தின் ஆக்ஷன் காட்சியில் நடிக்கும்போது பிரபாஸிற்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. அப்போது மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என அறிவுறுத்தி இருந்த நிலையில் கைவசம் தொடர்ந்து படங்கள் இருந்ததால் அதனை தள்ளி வைத்துக் கொண்டே இருந்தார் பிரபாஸ்.
இப்படியான நிலையில் இனியும் காலம் தாழ்த்தினால் பிரச்சனை பெரிதாகி விடும் என்ற காரணத்தினால் அவர் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அறுவைச் சிகிச்சை செய்து கொண்டு ஒன்றும் அதன் முழு ஓய்வில் இருக்க வேண்டும் என்பதால் பிரபாஸ் நடித்து வரும் சலார் உட்பட அடுத்த படங்களின் படப்பிடிப்பில் கலந்து கொள்வது சந்தேகம் தான். எனவே இந்த படத்தின் வேலைகள் தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.