தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியானது.
தெலுங்கு திரை உலகில் நல்ல வெற்றியைப் பெற்றுள்ள இந்த படத்தையும் விழா ஒன்றில் தெலுங்கு நடிகர் ராணா பங்கேற்று பேசினார். அப்போது சூர்யா உடனான பலவருட நட்பு குறித்து பேசியுள்ளார்.
சில வருடங்களுக்கு முன்னர் நான் நடித்த படத்தைப் பார்த்த சூர்யா என்னை அழைத்து காரில் 4 மணி நேரம் எனக்கு ஆக்டிங் கிளாஸ் எடுத்தார். அன்று அவர் எனக்கு சொல்லிக் கொடுத்த விஷயங்கள்தான் இன்று பெரிய அளவில் உதவியாக இருக்கின்றன. அதைத்தான் நீங்கள் பல்லாலதேவன், டேனியல் சங்கர் உள்ளிட்ட கதாபாத்திரங்களாக பார்க்க முடிந்தது என்று பெருமையாக கூறியுள்ளார்.
ராணா இவர் பேசிய பேச்சு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.