தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் அடுத்ததாக பாலா இயக்கத்தில் சூர்யா 41 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்கிறார்.
இந்த நிலையில் சூர்யா வெற்றிமாறன் படத்தில் நடிப்பதால் பாலா முகம் சுளித்த தாகவும் இதனால் இருவருக்குமிடையே சண்டை ஏற்பட்டு சூர்யா படபிடிப்பு தளத்தில் இருந்து வெளியேறி விட்டதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.
இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சூர்யா 41 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துவிட்டது. இதனையடுத்து கோவாவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடக்க உள்ளது செட் ஒர்க் முடிந்த பிறகு படப்பிடிப்பு தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதனால் சூர்யா பாலா இடையே சண்டை என வெளியான தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது கேள்விக்குறியாகியுள்ளது.