தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அதர்வா. நடிகர் முரளியின் மகனான இவர் தொடர்ந்து நல்ல நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அந்த வகையில் இவரது நடிப்பில் இன்று பட்டத்து அரசன் என்ற திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் ப்ரமோஷனுக்காக நடிகர் அதர்வா சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடிய போது அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்து இருந்தார்.
அப்போது ரசிகர் ஒருவர் இன்னும் சிங்கிளாகவே இருப்பது ஏன் லவ் ஃபெயிலியர் ஏதாவது இருக்கா என கேட்டுள்ளார். அதற்கு அதர்வா கண்டிப்பாக சில காதல் கதைகள் இருக்கு. ஆனால் அதெல்லாம் வாழ்க்கையில் சகஜம் தான். இருந்தாலும் பெரிய அனுபவம் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழ் சினிமாவில் எந்த மாதிரியான ரோலில் நடிக்க ஆசை என கேட்டதற்கு விக்ரம் படத்தில் இடம்பெறும் ரோலக்ஸ் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார். இது போல இன்னும் பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.