Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வெற்றிகரமாக ஐந்து வருட திரை பயணத்தை கடந்த கல்யாணி பிரியதர்ஷன். வைரலாகும் ட்வீட்

actress kalyani priyadarshan latest tweet viral

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் பல சூப்பரான படங்களில் நடித்து தற்பொழுது முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் தான் கல்யாணி பிரியதர்ஷன். இவர் மலையாளம் மற்றும் தமிழில் பல ஹிட் படங்களை இயக்கிய இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் ஆவார். தமிழில் இவர் சிவகார்த்திகேயனின் ‘ஹீரோ’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இப்படத்தில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து ‘புத்தம் புது காலை’ என்கின்ற படத்திலும் நடித்திருந்தார்.

ஆனால் கல்யாணி அதிக அளவில் ரசிகர்களுக்கு பரிச்சயமானது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படத்தில் தான். இப்படம் சிம்புக்கு மட்டுமின்றி நடிகை கல்யாணி பிரியதர்ஷனுக்கும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்திக் கொடுத்தது. இதன் மூலம் பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளும் பிசியான நடிகையாக வலம் வருகிறார்.

இந்நிலையில் கல்யாணி சினிமாவிற்கு வந்து ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்ததை பற்றி நெகிழ்ச்சியுடன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர், இன்றுடன் எனக்கு இத்துறையில் 5 ஆண்டுகள் நிறைவடைகிறது உங்களுடன். ஒவ்வொரு விஷயத்திற்கும் நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் நான் பெற்ற வளர்ச்சி (வெற்றிகளுடன் என் கைவினைப் போலவே). ஒவ்வொரு புதிய விஷயத்திற்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் ரசிகன், வரும் ஒவ்வொரு புதிய காதலுக்கும் என் வழி. மேலும் நான் இன்னும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் முதல் நாள் மற்றும் கடந்த 5 நாட்களாக என்னுடன் இந்த பயணத்தில் இருக்கிறேன் பல ஆண்டுகளாக, மொழிகள் முழுவதும், வகைகளில். நீங்கள் நீங்கள் யார் என்று தெரியும். நீ யாரென்று எனக்கு தெரியும். நான் வரும் காலங்களில் நான் தொடர்ந்து வளருவேன் என்று நம்புகிறேன் ஆண்டுகள் மற்றும் நீங்கள் என்னுடன்.