தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் பிரியங்கா நல்காரி.
இந்த சீரியலை தொடந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீதாராமன் தொடரில் நடித்து வந்தார். நீண்ட நாள் காதலர் ராகுலை காதல் திருமணம் செய்து கொண்ட பிரியங்கா சீரியலில் இருந்து வெளியேறினார்.
அதன் பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பாகிய நளதமயந்தி என்ற சீரியலில் நடிக்க தொடங்கினார். நளதமயந்தி சீரியலும் முடிவுக்கு வந்துவிட்ட நிலையில் தற்போது கணவருடன் சேர்ந்து பிசினஸை கவனித்து வருகிறார்.
சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வரும் நிலையில் தற்போது மலைப்பாம்பை தனது கழுத்தில் போட்டுக்கொண்டு போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்
View this post on Instagram