தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. பல்வேறு மொழிகளில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில் நான்கு வருடங்களில் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.
இதனால் மன அழுத்தத்தில் இருந்த சமந்தா அதிலிருந்து தற்போது மீண்டு வந்து படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் திரையுலகில் காலடி எடுத்து வைத்து 12 வருடங்கள் ஆகிவிட்டதை கொண்டாடி வரும் நிலையில் ரசிகர்களுடன் உரையாடியுள்ளார்.
அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் நம்பர் ஒன் நடிகையாக இருக்கிறீர்கள் என நம்புகிறீர்களா எனக் கேட்டதற்கு நான் நம்பர் ஒன் நடிகை இல்லை அந்த இடத்தை பிடிக்க இன்னும் உழைக்க வேண்டும் என கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் நம்பர் 1 இடத்தை பிடிப்பதை விட நிறைய நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சமந்தா திரையுலகில் அறிமுகம் ஆகி 12 வருடங்கள் ஆகியதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.