தமிழ் சினிமாவில் வெண்ணிற ஆடை என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி அதன் பின்னர் பல்வேறு படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்தவர் வெண்ணிற ஆடை நிர்மலா.
ஜெய்சங்கர், சிவாஜி கணேசன், எம்ஜிஆர், ரஜினி காந்த் என பல்வேறு நடிகர்களுடன் இவர் இணைந்து நடித்துள்ளார். மேலும் சின்னத்திரையில் தெய்வமகன் உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் நடித்திருந்தார்.
தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் சிங்கள் ஆகவே இருந்து வரும் இவர் திருமணம் செய்து கொள்ளாத அதற்கான காரணம் என்ன என கூறியுள்ளார். நான் திருமணம் வேண்டாம் என முடிவு செய்ததற்கு என்னுடைய அப்பா அம்மாதான் காரணம் என தெரிவித்துள்ளார்.
என் அம்மா அவ்வளவு அழகா இருப்பாங்க ஆனா எங்க அப்பா நாம நினைத்துக்கூட பார்க்காத அளவுக்கு அவங்க மேல சந்தேகப்படுவார். எனக்கும் இந்த மாதிரி ஒரு கணவர் வந்து விடக்கூடாது என்பதற்காகவே நான் திருமணம் செய்து கொள்ளவில்லை. மேலும் வேகமாக நடந்தால் வேகமா நடக்காதே கீழே விழுந்து காலை உடைத்துக் கொண்டா உன்னை யார் கட்டிப்பா என சொல்வாங்க. மணிக்கட்டுல வேகமா இறங்கினான் கீழே விழுந்து மூக்கை உடைத்து விட்டா யார் கட்டிப்பாங்க என கேட்பாங்க, இதையெல்லாம் கேட்டுக் கேட்டு சலித்துப் போய்விட்டது.
ஒரு கட்டத்தில் என்னை யாருமே கட்டிக்க வேண்டாம் என முடிவு செய்துவிட்டேன். அதனால்தான் தற்போது வரை தனியாகவே வாழ்ந்து வருகிறேன் என தெரிவித்தார்.