முன்னணி பாலிவுட் நடிகர்ளான அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், அவரின் மகள் என அனைவருக்கும் இம்மாதம் கடந்த 11 ஆம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனால் அவர்கள் மும்பையில் உள்ள நனாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து இருவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார். ஆனால் கடந்த 18 ஆம் தேதி ஐஸ்வர்யா ராய் மற்றும் மகள் ஆரத்யாவிகிற்கும் தீடீர் மூச்சி திணறல் ஏற்பட்டது.
இதனால், இருவரும அமிதாப் மற்றும் அபிஷேக் சிகிச்சை பெற்றுவந்த பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரின் மகள் ஆரத்யாவுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரானா பரிசோதனையில் கொரானா நெகட்டிவ் என முடிவு வந்துள்ளதாகவும், இதையடுத்து இருவரும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டதாகவும் அமிஷேக் பச்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும், தனது தந்தை அமிதாப் பச்சனும், நானும் இன்னும் கொரோனாவில் இருந்து குணமடையாததால் தொடர்ந்து மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்றுவருவதாகவும், பிரார்த்தனை செய்துவரும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் அபிஷேக் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Thank you all for your continued prayers and good wishes. Indebted forever. 🙏🏽
Aishwarya and Aaradhya have thankfully tested negative and have been discharged from the hospital. They will now be at home. My father and I remain in hospital under the care of the medical staff.— Abhishek Bachchan (@juniorbachchan) July 27, 2020