இந்திய திரை உலகில் சூப்பர் ஸ்டாராக மாஸ் காட்டி வருபவர் ரஜினிகாந்த். மாபெரும் ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கும் இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் இரண்டு படங்களை நடிக்க இருக்கிறார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் ஏ ஆர் ரகுமான் இருவரும் நேரில் சந்தித்து பேசியுள்ளனர்.
இதற்கு பிரபல இயக்குனரும் ரஜினியின் மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர், “இரு அற்புதமான மனிதர்கள் சந்திப்பதற்கு காரணமாக இருப்பதில் மகிழ்ச்சி என்று தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார். இவர்களது சந்திப்பு ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்து வரும் லால் சலாம் திரைப்படத்திற்காக இருக்குமோ என்ற கேள்வி ரசிகர்களின் மத்தியில் எழுந்துள்ளது.
When two amazing human beings meet and you happen to be the reason ..you are blessed and of course they are THE best! @arrahman sir @rajinikanth appa ! pic.twitter.com/8WC83GpV6E
— Aishwarya Rajinikanth (@ash_rajinikanth) November 30, 2022