தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் பெரும் வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து நீங்கள் வினோத் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் மிக விரைவில் தொடங்க உள்ளன. இந்த படம் குறுகிய கால பட்ஜெட் படமாக உருவாக உள்ளது.
இந்த படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் நாயகியாக நயன்தாரா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஐந்தாவது முறையாக அஜித்துடன் ஜோடி சேருகிறார் நயன்தாரா.
இதெல்லாம் ஒருபுறமிருக்க இந்த படத்திற்காக அஜித் 100 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளார். ஆனால் லைகா நிறுவனம் அவர் கேட்ட தொகையை விட 5 கோடி அதிகமாக கொடுக்க முன்வந்துள்ளது. அதாவது இந்த படத்திற்கு அஜித்திற்கு 105 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்க உள்ளது லைகா நிறுவனம்.
இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.