பாலிவுட்டில் முன்னணி நடிகர்களில் மிகவும் பிரபலமாக ரசிகர்கள் மத்தியில் திகழ்ந்து வருபவர் நடிகர் அக்ஷய் குமார்.
இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் இணைந்து ஷங்கர் இயக்கத்தில் 2.0 எனும் படத்தில் நடித்திருந்தார்.
கொரோனா காரணமாக இந்திய முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியே செல்வதற்கு யாருக்கும் அனுமதி கிடையாது.
இந்நிலையில் நடிகர் அக்ஷய் குமார், டாக்டரை சந்திக்கப்போவதாக சிறப்பு அனுமதி பெற்று மும்பையில் இருக்கும் நாசிக்கிற்கு ஹெலிகாப்டரில் சென்றுள்ளார்
அங்குள்ள சொகுசு விடுதி ஒன்றில் தற்போது தங்கியுள்ளராம். கொரோனா ஊரடங்கு காலத்தில் அக்ஷய் குமாருக்கு மட்டும் ஹெலிகாப்டரில் செல்ல அனுமதி அளித்தது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதுகுறித்து மராட்டிய உணவுத்துறை மந்திரி ஷாகன் புஜ்பால் பேசுகையில் :
“அக்ஷய் குமாரின் ஹெலிகாப்டர் பயணம் ஊடகங்கள் மூலம் தான் எனக்கே தெரியவந்தது. அவர் எங்கு இருக்கிறார் என்று எனக்கு தற்போது தெரியவில்லை.
இதுகுறித்து விசாரிக்க போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளேன். அவருக்கு யார் சிறப்பு அனுமதி கொடுத்தது, ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அதிகாரிகள் தான் பொறுப்பு ” என்று தெரிவித்துள்ளார் ஷாகன் புஜ்பால்.