தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ். இந்த சீரியலில் இணைந்து நடித்த இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு ஒரு மகளை பெற்றுக் கொண்டுள்ளனர்.
குழந்தை பிறந்த கையோடு மகனுக்கு பெயர் வைத்த ஆல்யா, சஞ்சீவ் – பெயர் சூப்பரா இருக்கே.!!
இதனையடுத்து சஞ்சீவ் சன் டிவியில் கயல் சீரியலில் நடிக்க ஆலியா மானசா விஜய் டிவியில் ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வந்தார். இரண்டாவது முறையாக கர்ப்பம் ஆன ஆலியா மானசா பிரசவத்தின் காரணமாக இந்த சீரியலில் இருந்து விலகிக்கொண்டார். இவருடைய விலகல் தற்காலிகமானது என சொல்லி வந்த நிலையில் சமீபத்தில் இவர் இனி ராஜா ராணி 2 சீரியலில் நடிக்க வர மாட்டேன் என உறுதியாக கூறியுள்ளார்.
மேலும் இவருக்கு இன்று ஆண் குழந்தை பிறந்த நிலையில் தன்னுடைய குழந்தைக்கு அர்ஷ் என பெயர் சூட்டியுள்ளார் சஞ்சீவ். ரசிகர்கள் பலரும் ஆல்யா மற்றும் சஞ்சீவுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
View this post on Instagram